×

கால்வாய் அடைப்பை சரி செய்தபோது விஷவாயு தீப்பற்றி வாலிபர் படுகாயம்

பெரம்பூர்:கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெருமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (21). வியாசர்பாடி கூட்டுறவு தொழிற்பேட்டையில் தங்கி வேலை செய்து வருகிறார். இங்குள்ள கழிவுநீர் கால்வாயில் நேற்று மதியம் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை கிருஷ்ணமூர்த்தி  சரி செய்ய முயன்றார். இதற்காக, கால்வாயில் விஷவாயு உள்ளதா என பரிசோதிக்க தீக்குச்சியை பற்றவைத்தபோது, திடீரென தீப்பிடித்ததால் படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Youth injured in poison gas fire while repairing canal blockage
× RELATED தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ...